இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த துயரம்!
அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் நீராட சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று(02.11.2023) மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
77 வயதான போலந்து நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் சுற்றுலா உணவகத்துக்கு அருகில் கடலில் நீராடச் சென்ற போது கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
அலையில் சிக்கிய அவர் மீட்கப்பட்டு பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பேருவளை மரண விசாரணை அதிகாரி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்