திருகோணமலை - கொழும்பு தொடருந்து சேவை: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
திருகோணமலை தொடக்கம் கொழும்புக்கு இடையிலான இரவு நேர தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற கால நிலை மற்றும் திட்வா புயல் காரணமாக குறித்த இரவு நேர சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், திருகோணமலை தொடக்கம் கொழும்புக்கான பகல் நேர சேவை இருந்தாலும் இரவு நேர சேவையின் மூலமாகவே அதிகளவான பயணிகள் பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணிகள்
அத்தோடு, உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இரவு நேர சேவை மூலமே திருகோணமலை தொடக்கம் கொழும்பு சேவையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், இரவு நேர சேவையில் குளிரூட்டப்பட்ட முதலாம் தர பெட்டி காணப்படுவதனால் அதிகளவான வெளிநாட்டு பயணிகளும் கொழும்பில் இருந்து திருகோணமலையை வந்தடைகின்றனர்.
இந்தநிலையில், தொடருந்து திணைக்களம் இவற்றை கருத்திற் கொண்டு இரவு நேர தொடருந்து சேவையை தாமதப்படுத்தாது மீள உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |