போர்நிறுத்த நிபந்தனையை மீறும் ஈரான்! கடும் கோபத்தில் ட்ரம்ப்
வெளிநாட்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தத் தாக்குதல்கள் பிரான்ஸ் நாட்டு கப்பல் ஒன்றையும் ஐக்கிய இராச்சியத்தின் சரக்குக் கப்பல் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை ஏற்கனவே அந்தப் பாதையை மூடியுள்ள நிலையில், ஈரான் மீண்டும் அந்த நீரிணையை மூடுவதாக அறிவிப்பது விசித்திரமானது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இதன் மூலம் ஈரான் தனக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதாகவும் சாடியுள்ளார்.
ஈரானுக்கு இழப்பு
இந்த முடக்கத்தினால் ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 500 மில்லியன் டொலர்களை இழப்பதாகவும், ஆனால் அமெரிக்காவிற்கு இதனால் எவ்வித இழப்பும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: PRIO
இதேவேளை, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையானது போர்நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகளை மீறும் செயல் என ஈரான் தரப்பும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |