உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் - புடினின் நேரடி சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இருவரும் சவுதி அரேபியாவில் (Saudi Arabia) சந்திக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப்பும் மற்றும் புடினும் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடியதாக கூறப்பட்ட நிலையில், குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா போரை நிறுத்த புடினை சவுதி அரேபியாவில் ட்ரம்ப் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவுக் கொள்கை
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ரியாத் நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை யார் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், முந்தைய அறிக்கைகள் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதிகளில் இருக்கலாம் என தெரிவிக்கின்றது, புடின் மற்றும் ட்ரம்ப் இடையிலான சந்திப்புக்கும் பிரதிநிதிகள் குழு தயாராகும் என Axios தெரிவித்தது.
இதனைபோல், நீண்டகால வெளியுறவுக் கொள்கை தூதர் யூரி உஷாகோவ், வெளியுறவு புலனாய்வு சேவை தலைவர் செர்ஜி நரிஷ்கின் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் குழுவை புடின் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியுறவு அமைச்சர்
அமெரிக்காவின் சார்பில் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் உக்ரைன், ரஷ்யாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெலொக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோ மற்றும் ஜனாதிபதி புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.
மேலும், வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க டிமிட்ரிவ் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
