பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை வெளியேற்றிய அமெரிக்க வங்கிகள்
அமெரிக்க (America) வங்கிகள் பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் (London) இருந்து வெளியேற்றியுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி அச்சுறுத்தல்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்கள் காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா, சீனா மற்றும் மெக்சிகோவிற்கு எதிராக ஏற்கனவே வரி விதித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்து ஐரோப்பாவை குறிவைக்கலாம் என்ற அச்சமே, தங்கத்தை லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு மாற்ற அமெரிக்க வங்கிகளை தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளிலிருந்து இந்த மிகப்பெரிய தங்க வருகை அமெரிக்காவின் தங்க இருப்புக்களை இரட்டிப்பாக்கியுள்ளது.
நவம்பர் ஐந்தாம் திகதி 50 பில்லியன் டொலர்களாக இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு, தற்போது 106 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதுமட்டுமன்றி, ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக தங்கத்தின் விலையிலும் கடும் ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது.
இதனால் டிசம்பர் முதல் லண்டனில் தங்கத்தின் விலைகள் சுமார் 20 டொலர்கள் வரையில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
