ஈரான் உச்ச தலைவரை சந்திக்கப்போகும் ட்ரம்ப் : அவரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை எதிர்காலத்தில் தான் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியிடமே உள்ளதாகத் தான் நம்புவதாகவும், அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் கண்டிப்பாகச் சந்திப்போம்
"நான் அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன். சூழ்நிலைகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்து, நாம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாகச் சந்திப்போம்" என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பொதுவெளியில் தோன்றாத கமேனி
போர் தொடங்கியதில் இருந்து மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை. அறிக்கைகள் மூலமே அவர் இதுவரை தனது முடிவுகளை அறிவித்து வருகிறார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தெரிவிக்கையில், "அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக நான் கேள்விப்படவில்லை. வெளியாகும் கதைகளை வைத்து பார்த்தால், அவர் தனது உடலின் பல்வேறு உறுப்புகளை இழந்துள்ளதாகத் தெரிகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |