கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கடுமையான வரியை 3 நாட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுமார் 20 பில்லியன் மதிப்புள்ள கனடியப் பொருட்கள் மீது நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கணிசமான முன்னேற்றம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்கா இடையே ஆவணங்களை இறுதி செய்யும் கட்டத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில், நடைமுறைக்கு வரவிருந்த 50 வீதம் வரியை 3 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனால் ரத்து செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய கீஸ்டோன் எக்ஸ்எல் எண்ணெய் குழாய் திட்டம் (Keystone XL oil pipeline) மீண்டும் தொடங்கப்படலாம் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இன்னும் சில முக்கியமானப் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என கனடியப் பிரதமர் மார்க் காரணி தெரிவித்துள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், உள்நாட்டில் வலுவான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலேயே கனடா கவனம் செலுத்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |