ஈரானை வழிநடத்திய இராணுவத் தளபதிகள் பலர் பலி : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானை தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் அரசாங்கம்
அந்தப் பதிவில், இரவில் ஒரு நகரத்தின் வானுயரக் கட்டிடங்களை ஒளிரச் செய்யும் வெடிப்புகளைக் காட்டும் ஒரு காணொளி இடம்பெற்றிருந்தது, ஆனால் அந்த இராணுவ நடவடிக்கை எப்போது நடந்தது என்று அது குறிப்பிடவில்லை

எனினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தலையும் அல்லது மறுப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |