ஈரானின் இராணுவம் முற்றாகச் சிதைக்கப்பட்டது...! ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு
ஈரானின் கடற்படை, விமானப்படை, விமான எதிர்ப்பு மற்றும் ரேடார் அமைப்புகளை அமெரிக்கா முழுமையாக அழித்துவிட்டது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அமெரிக்காவின் தாக்குதல்களால் ஈரானின் தற்காப்பு அரண்கள் பலவீனமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணை உற்பத்தி
அவர்களிடம் இப்போது மிஞ்சியிருப்பது மிகக் குறைவுதான் எனவும் ஒரு சிறிய சதவீத ஏவுகணைகள் மட்டுமே தற்போது அவர்களிடம் எஞ்சியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணை உற்பத்தி நிலையங்களில் சுமார் 80 சதவீதம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த ட்ரம்ப், அந்நாட்டின் தாக்குதல் நடத்தும் திறன் பெருமளவு முடக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிடம் எஞ்சியுள்ள குறைந்த அளவிலான ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவிற்குப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்பதையும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இராணுவ பலம்
ஈரானின் இராணுவ பலம் சரிந்துள்ள நிலையில், அணு ஆயுதக் கனவை அவர்கள் கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக வலியுறுத்திய ட்ரம்ப், இது அவர்களுக்கும் தெரியும் உலகிலுள்ள மற்ற அனைவருக்கும் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடும் வரை எவ்வித சமரசமும் செய்யப்போவதில்லை என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்பின் இந்தத் தகவல், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |