ட்ரம்ப் அதிரடி திட்டம்: தைவானுக்கு மாபெரும் ஆயுத உதவி
சீனாவிற்கு (China) எதிராக தைவானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (டொனால்ட் ட்ரம்ப்) அதிகரிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப், தனது முந்தைய பதவிக்காலத்தில் வழங்கப்பட்டதை விட அதிக அளவில் ஆயுதங்களை தைவானுக்கு விற்க திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், சீனாவின் இராணுவ அழுத்தத்துக்கு எதிராக தைவானை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த விற்பனைகள் நடைபெறவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக ஆதரவு
முந்தைய ட்ரம்ப் நிர்வாகம் $18.3 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்ற நிலையில், பைடன் நிர்வாகத்தில் $8.4 பில்லியனாக குறைக்கப்பட்டது.
இதன்படி, தற்போதைய புதிய ட்ரம்ப் நிர்வாகம் தைவானுக்கு அதிக ஆதரவு அளிக்கப்போகிறது என்பது உறுதியாகி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்காவானது தைவானின் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க ஒத்துழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளத தைவானின் ஜனாதிபதி லாய் சிங்-டே தலைமையிலான அரசு, பாதுகாப்பு செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) மூன்று சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
தைவான் மக்கள்
தைவானுக்கு வழங்கப்படும் புதிய ஆயுதங்களில், ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் தாக்குதலை தடுக்க இது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சீனா, தைவானை தன் பகுதியாகக் கருதி ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது ஆனால் தைவான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க தங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
