திருகோணமலையில் சட்டவிரோத மண் அகழ்வு : பின்னனியில் இருவர் கைது
Sri Lanka Police
Trincomalee
By Kathirpriya
திருகோணமலை -வெருகல் பிரதேசத்தின் வட்டவான் கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இருவரை சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் நேற்று (28) ஈச்சிலம்பற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான கதிர்காமத்தம்பி திருநாவுக்கரசு மற்றும் வட்டவான் மரணசங்கத் தலைவர் தர்மலிங்கம் ஜெயகாந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெருகல் - நாதனோடையில் மணல் அகழ்வதற்கு எதிராக பொதுமக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் பின்னனியில் இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விரிவான, மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்