ஹோர்முஸ் விவகாரத்தில் நுழையும் பிரித்தானியா! அதிநவீன ஆயுதகங்களுடன் புறப்படும் படைகள்
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் சர்வதேச தற்காப்புப் பணியில், பிரித்தானியா தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் போர் காரணமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பிரித்தானியா நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிரித்தானியா வழங்கும் ஆயுதங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ், கண்ணிவெடி வேட்டை கருவிகள், டைபூன் போர் விமானங்கள் மற்றும் 'ஹெச்.எம்.எஸ் டிராகன்' என்ற அதிநவீன வான் பாதுகாப்பு போர்க்கப்பல் ஆகியவற்றை வழங்கவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி அறிவித்துள்ளார்.

Image Credit: news | ERR
இந்த நடவடிக்கைகளுக்காக 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 155.53 மில்லியன் டொலர்) புதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறியும் ஆளில்லா படகுகள் போன்ற தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படவுள்ளன.
போர்க்கப்பல் பயணம்
ஏற்கனவே மத்திய கிழக்குப் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பிரித்தானிய இராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய போர்க்கப்பல் ஏற்கனவே அப்பகுதியை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Sky News
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடந்து செல்வதால், சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானது என்று பிரித்தானியா தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |