ரஷ்யாவுக்கு பிரித்தானியா விடுத்த அதிரடி எச்சரிக்கை: வலுக்கும் போர் பதற்றம்
பிரித்தானியா (United Kingdom) மற்றும் நேட்டோ படைகள் ரஷ்ய (Russia) போர் விமானங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஐரோப்பாவின் வான்வெளியில் அத்துமீறி நுழையும் ரஷ்ய போர் விமானங்களை எதிர்கொள்ள பிரித்தானியா மற்றும் நேட்டோ படைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நியூயோர்க்கின் ஐ.நா பாதுகாப்பு ஆணையகத்திடம் பேசிய அவர், நேட்டோ பிராந்தியத்திற்குள் அனுமதியின்றி நுழையும் ரஷ்ய விமானங்களுக்கு எதிராக தங்கள் இராணுவ படை உடனடி நடவடிக்கை எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால நடவடிக்கை
அத்தோடு, ரஷ்யாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் பொறுப்பற்றதாகவும் மற்றும் அபாயகரமானதாகவும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கை ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குலைக்கும் முயற்சி என்றும் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொடர் செயல்கள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான நேரடி ஆயுத மோதலுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
