உக்ரைனுடன் மீண்டும் ஒப்பந்தம் செய்ய தயார் இல்லை : புடின் அறிவிப்பு
ரஷ்யாவினுடைய வேளாண்மைப் பொருட்களினை ஏற்றுமதி செய்ய மேலைத்தேய நாடுகள் அனுமதி வழங்கும் வரை, உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படாது என ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளாா்.
உணவுப் பற்றாக்குறை காணப்படுகின்ற ஆபிரிக்க, ஆசிய நாடுகளுக்கு உக்ரைனிலிருந்து கருங்கடல் ஊடக தானியங்களைக் கொண்டு செல்வதற்காக கைச்சாத்திடப்பட்டிருந்த கருங்கடல் ஒப்பந்தத்தினை ரஷ்யா நிறுத்திவைப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.
துருக்கியின் அதிபர் எா்டோகனுடன் தானிய ஒப்பந்தம் குறித்து விளாடிமிர் புடின் பேச்சுவாா்த்தை ஒன்றை நிகழ்த்தியிருந்தார், அது சம்பந்தமாக அவர் கூறியதாவது:
தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது, ரஷ்யாவிலிருந்து உணவுப் பொருட்கள், உரம் ஆகியவற்றை உலகின் பிற நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அனுமதிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
தானிய ஒப்பந்தம்
ஆனால், அந்த உறுதிமொழியினை மேலைத்தேய நாடுகள் நிறைவேற்றாததன் காரணத்தால் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்திவைத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த உறுதிமொழியின் பிரகாரம் ரஷ்யாவின் வேளாண்மை பொருட்களை ஏற்றுமதி செய்ய மேலைத்தேய நாடுகள் அனுமதி அளித்தால் மாத்திரமே தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறினார்
அந்த உறுதிமொழியை மேலைத்தேய நாடுகள் முறையாக அளித்தால் இன்னும் சில நாட்களிலேயே தானிய ஒப்பந்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவா் கூறினார்.
ரஷ்ய - உக்ரைன் போரின் ஒரு பகுதியான, கருங்கடல் பகுதியில் ரஷ்யா தனது போா்க் கப்பல்களை நிறுத்தி வைத்திருந்ததனால், அந்தக் கடல் வழியாக உக்ரைன் பிற நாடுகளுக்கு பொருட்களை கொண்டு செல்வவதற்கு தடையை விதித்தது.
இந்நிலையில் தற்போது ரஷ்யா இப்படியொரு விடயத்தை முன்வைத்திருப்பது உயிா் காக்கும் உணவுப் பொருள்களை தனது போா் ஆயுதமாக புடின் பயன்படுத்துவதாகவே அமைகிறது என்று மேலைத்தேய நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
