ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் - 24 மணி நேரத்தில் கொன்றொழிக்கப்பட்ட படைகள்!
உக்ரைன் இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 340 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாக முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரண்டு டாங்கிகள், இரண்டு கவச வாகனங்கள் மற்றும் இரண்டு பீரங்கி அமைப்புகளும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு ட்ரோன்களும் வீழ்த்தப்பட்டுள்ளன என உக்ரைன் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எச்சரிக்கை
இவ்வாறான நிலையில், உக்ரைனுடனான இந்த போரில் அணு ஆயுதங்களை ரஷ்யா முதலில் பயன்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தாலும், ரஷ்யா அச்சுறுத்தப்பட்டால் நிச்சயம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இதுவரை 93,000க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ஆயுதப்படை தகவல் தெரிவித்துள்ளது.
Hot. pic.twitter.com/IW83f7swDp
— Defense of Ukraine (@DefenceU) December 8, 2022
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் புடின் நடத்தி வரும் போர் தாக்குதல் 10வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரின் ஆரம்ப கட்டத்தில் ரஷ்யா கைப்பற்றி வைத்திருந்த கெர்சன் உட்பட முக்கிய கிழக்கு உக்ரைனிய பகுதிகளை சமீபத்தில் ரஷ்ய படைகளை இழந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.
உயிரிழந்த ஆயிரக்கணக்கான ரஷ்ய படைகள்
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இதுவரை 93,000 ரஷ்ய வீரர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
"I was not born to be forced. I will breathe after my own fashion. Let us see who is the strongest."
— Defense of Ukraine (@DefenceU) December 8, 2022
Henry David Thoreau
Total combat losses of the enemy from Feb 24 to Dec 8: pic.twitter.com/VqiJAdTJhA
இருப்பினும் உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடர்ந்து முன் நகர்த்தப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைக்காட்சி வாயிலாக நேற்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.