உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் பட்டினிச்சாவு ஏற்படும் ஆபத்து! ரணில் எச்சரிக்கை
Ranil Wickremesinghe
Russo-Ukrainian War
By pavan
உக்ரைன் - ரஷ்யப் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்க நேரிடும் என்று பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளினால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால் ரஷ்யா மண்டியிடவில்லை மாறாக மூன்றாம் உலக நாடுகளே மண்டியிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உக்ரைன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்
ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபந்தனைகளை விதிக்காது உக்ரைன் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி