புடினுக்கு மற்றுமொரு பேரிழப்பு -மின்னணு போர்தளபதி கொல்லப்பட்டார்
உக்ரைன் போரில் ரஷ்ய அரச தலைவருக்கு மற்றுமொரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்களத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றுமொரு தளபதியை இழந்துள்ளது ரஷ்யா.
மேஜர் ஜெனரல் ஆண்ட்ரே சிமோனோவ்(Andrei Simonov) 55,என்ற தளபதி உக்ரைன் நாட்டின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கோவ் (Kharkov) அருகே உள்ள இசியம் (Izyum) என்ற இடத்தில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக உக்ரைன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் ரஷ்யாவின் மிகவும் மரியாதைக்குரிய மின்னணு போர் தளபதி என்று கூறப்படுவதுடன், 2-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தில் (Combined Arms Army) பணியாற்றினார்.
கிரோவ் பகுதியைச் சேர்ந்த சிமோனோவ், டாம்ஸ்க் உயர் இராணுவக் கட்டளைப் பள்ளியில் பட்டம் பெற்றவர் மற்றும் ரஷ்யாவின் இராணுவ முன்னணி எலக்ட்ரோனிக்ஸ் போர் நிபுணராகக் காணப்பட்டார்.
ரஷ்ய தாக்குதலுக்கு எதிராக உக்ரைனியர்களின் பேரழிவுகரமான சண்டையில் சிமோனோவ் இறந்தார். இந்த சண்டையில் 30-க்கும் மேற்பட்ட ரஷ்ய கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் தாக்குதலில் சுமார் 100 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடன் சேர்த்து ரஷ்ய இராணுவம் ஒன்பது ஜெனரல்களை இழந்ததுடன், இரண்டு மாதங்களுக்கும் மேலான சண்டையில் 36 கேணல்களை புடின் இழந்துள்ளார். இது வியக்க வைக்கும் விகிதம் என்று இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
