யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் - அரசியல்வாதிகளின் அசமந்த போக்காம்..!

Agriculture Water And Action For Rural Development Jaffna Sri Lanka
By Beulah May 31, 2023 01:22 PM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்தமாக செயற்படுவதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று(31) இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவருதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது எனவும்,  குடிநீர் வழங்குவதற்கான குழாய் புதைக்கும் திட்டமானது நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றதாகவும்  இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருங்கிணைப்பு குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் - அரசியல்வாதிகளின் அசமந்த போக்காம்..! | Unfair Trend Of Politicians Jaffna Water Fitching

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களின் ஊடாக தற்போது காற்றுக் கூட வருகிறதோ தெரியவில்லை.

ஆனால் இந்தக் குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கினை காட்டுகிறார்கள். இதுதான் உண்மை.

குறிப்பாக இந்த அரசியல்வாதிகள் யாரும் யாழிற்கான குடிநீர் பிரச்சினை தொடர்பில் கதைத்ததாக இல்லை.

அண்மையில் நான் புதிதாக கடமையேற்ற ஆளுநரிடமும் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளேன். எனவே குடிநீரை கொண்டு வருவதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, நாங்கள் வடக்கு மாகாண சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதனை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும், கிடப்பில் கிடக்கின்ற அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் - அரசியல்வாதிகளின் அசமந்த போக்காம்..! | Unfair Trend Of Politicians Jaffna Water Fitching

ஐவர் கொண்ட விசேட குழு நியமனம்

இவர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ். மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழுவில் வடக்கு மாகாண சபையின் அவைத்  தலைவர், அதிபரின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர், பிரதமர் செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர் களப்பணிப்பாளர் உட்பட ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழு நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதோடு நாளை மறுதினம் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025