பிரித்தானியாவுடன் உடன்படிக்கை செய்ய கோட்டாபயவுடன் பேச்சு
பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றினைச் செய்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான இயலுமை குறித்து இலங்கை வர்த்தகச் சபை அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்த தயாராக உள்ளதாக, ஜனாதிபதியிடம், இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளனர்.
“சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த நிகழ்ச்சித் திட்டங்களை, கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையினைத் தடையாகக் கொள்ளாமல், ஜனாதிபதி செயற்படுத்தியுள்ளார்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரைவான வேலைத்திட்டத்துக்கு பங்களிக்க முடியும் என்று இலங்கை வர்த்தக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.