மகனின் கார் சில்லில் சிக்கி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பலி
காரின் சில்லில் சிக்கி கொழும்பு பல்கலைக்கழக (University of Colombo) சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து கொஹுவல (kohuwala) காவல்துறை பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 59 வயதுடைய கொஹுவல சுமனாராம வீதியைச் சேர்ந்தவர் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காரின் சில்லில் சிக்கி படுகாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இறந்த விரிவுரையாளர் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது கார் திடீரென நின்றுள்ளது.
இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார். இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணும் அவரது மருமகளும் காரை இயக்குவதற்காக முன் சக்கரத்திலிருந்து கல்லை அகற்றியுள்ளனர்.
இருப்பினும், வாகனம் சரிவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், அது திடீரென முன்னோக்கி நகர்ந்துள்ளது.
இதன்போது, இறந்த பெண் காரின் சில்லில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கார் முன்னோக்கி வந்த போது மருமகள் உடனடியாக விலகிய போதும், உயிரிழந்த பெண்ணால் விலக முடியாததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 22 மணி நேரம் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
4 நாட்கள் முன்