ரணிலின் உடல்நிலையை கருதி ஐ.தே.க எடுத்துள்ள திடீர் முடிவு
வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு விழாவை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு எடுத்த முடிவு
இன்று (02) கொழும்பில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தலதா அதுகோரல தெரிவித்தார்.
ஒத்திவைக்கப்பட்ட 79வது ஆண்டு விழாவை இந்த மாதம் வேறு ஒரு திகதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
