பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையுடன் கைகோர்த்த அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு அமைப்பானது International Executive Services Corps (IESC) இலங்கையின் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் IESC இன் தலைமை நிர்வாகியும் தலைவருமான டேவிட் ஹார்டிஞ்ச் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமூகத்தை வலுப்படுத்த பொருளாதார நிலையை மேம்படுத்துவதே அமைப்பின் நோக்கம் என்றும், தனது நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் நோக்கம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிதி ஒத்துழைப்பு
அத்தோடு, ஒரு நாளைக்கு சுமார் 100 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான கறவை மாடு மேலாண்மை அலகுகளின் திறனை அதிகரிப்பது போன்ற திட்டங்கள் குறித்த அமைப்பால் செயற்படுத்தப்படும் எனவும் டேவிட் ஹார்டிஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, புதிய தொழில்நுட்பத்தை வழங்குதல் மற்றும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு IESC இன் ஆதரவால் மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்