பென்டகனின் அதிரடி நகர்வால் வளைகுடாவில் உச்சகட்டப் பரபரப்பு...!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற 82ஆவது வான்வழிப் பிரிவு (82nd Airborne Division) மற்றும் 10 ஆவது மலைப் பிரிவின் முதலாவது பிரிகேட் காம்பாட் டீம் (1st BCT) ஆகியவற்றை அங்கு நிலைநிறுத்துவதைப் பென்டகன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் செல்லும் துல்லியமான இடங்களை வெளியிட அமெரிக்கா மறுத்துள்ளது.
இருந்தபோதிலும் இந்த அதிரடி நகர்வு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்டகாலப் போர்
உலகின் எந்தப் பகுதிக்கும் வெறும் 18 மணிநேரத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட 82 ஆவது வான்வழிப் பிரிவினர், பாராசூட் மூலம் ஊடுருவி இலக்குகளைக் கைப்பற்றுவதில் வல்லவர்கள்.
குறிப்பாக ஈரானின் முக்கியப் பகுதியான கார்க் தீவு (Kharg Island) போன்ற இடங்களைக் கைப்பற்ற இந்த வீரர்கள் பயன்படுத்தப்படலாம் எனக் கணிக்கப்படுகிறது.

இவர்களுடன் இணைந்து அனுப்பப்படும் 1st BCT படையினர், Full Spectrum எனப்படும் அனைத்து வகையான தீவிர மற்றும் நீண்டகாலப் போர்களை எதிர்கொள்ளும் முழுமையான ஆயுத தளவாடங்களைக் கொண்டவர்கள் ஆவர்.
இந்தநிலையில், ஈரான் மண்ணில் தரைப்படையை இறக்க விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வந்த போதிலும் பென்டகனின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்கா ஒரு நேரடித் தரைப்படைத் தாக்குதலுக்குத் (Ground Invasion) தயாராகி வருவதையே காட்டுவதாகச் சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |