ஹோர்முஸ் நீரிணை ஊடாக செல்ல முற்பட்ட பாகிஸ்தான் கப்பலுக்கு நேர்ந்த கதி
ஹோர்முஸ் நீரிணை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் கப்பலை ஈரானியப் படைகள் திருப்பி அனுப்பியுள்ளன.
அனுமதியின்றி தங்கள் கடல் எல்லைக்குள் நுழைய கப்பல் முயன்றதாகக் கூறி, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இந்த முடிவை எடுத்துள்ளது.
'செலான்' என்று அழைக்கப்படும் அந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து கராச்சிக்குச் சென்று கொண்டிருந்தது.
கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம்
கப்பல் தொடர்பான முடிவை 'X' பதிவில் எழுதியுள்ள IRGC கடற்படைத் தளபதி அலிரெஸா டங்சிரி, தங்கள் சட்டங்களுக்கு இணங்காததாலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதி இல்லாததாலும் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாகக் தெரிவித்துள்ளார்.

"இந்த நீர்வழிப்பாதை வழியாக எந்தவொரு கப்பலும் செல்வதற்கு, ஈரானிய கடல்சார் அதிகாரிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
அனுமதியின்றி எந்தக் கப்பலும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல முடியாது
ஈரானிய அதிகாரிகளின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல முடியாது. 'பகைமையற்ற' கப்பல்கள், ஈரானிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து (சில சமயங்களில் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியும்) தங்களின் நீர்வழி உரிமைகளைப் பயன்படுத்தலாம்.

இருப்பினும், எதிரியுடன் தொடர்புள்ள கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதையைக் கடக்கத் தடை செய்யப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |