ஈரானுக்கு எதிராக ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை களமிறக்கும் அமெரிக்கா!
அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆளில்லா ட்ரோன் வேகப்படகுகளை கடல் கண்காணிப்பிற்காக பயன்படுத்தியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஒரு தீவிரமான மோதலில் இதுபோன்ற கப்பல்களைப் பயன்படுத்துவதை அமெரிக்கா உறுதிப்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த ட்ரோன் படகுகள் கண்காணிப்பு பணிகளுக்கும், தேவையெனில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக்கூடியவை என தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு பணி
இருப்பினும், அமெரிக்கா இவற்றை தாக்குதல் நோக்கில் பயன்படுத்தியதற்கான இந்த ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை.

Image Credit: Reuters
Global Autonomous Reconnaissance Craft (GARC) எனப்படும் இந்த ட்ரோன் வேகப்படகுகள், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் Operation Epic Fury நடவடிக்கையின் கீழ் பயன்படுத்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
அதன்போது, அவை 450 மணிநேரத்திற்கும் மேலாக கடலில் செயல்பட்டு, 2,200 கடல் மைல்கள் தாண்டி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைனின் தொழில்நுட்பம்
அண்மைக் காலங்களில், உக்ரைன் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு எதிராக வெடிபொருள் ஏந்திய ட்ரோன் படகுகளை பயன்படுத்தியதன் மூலம் இத்தகைய தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, ஈரானும் சமீபத்தில் வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்களை தாக்க கடல் ட்ரோன்களை பயன்படுத்தியுள்ளது.
அமெரிக்கா பல ஆண்டுகளாக ஆளில்லாத கடல்மேற்பரப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள், செலவுக் கவலைகள் மற்றும் பரிசோதனை தோல்விகள் காரணமாக இந்த திட்டம் தாமதமடைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |