பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக இன்று (14) ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தாக்குதலால் தூதரக கட்டிடத்திலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும், தூதரக வளாகத்திற்குள் உள்ள ஹெலிபேட் தளத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் தலைநகர் மீதான தாக்குதல்களில் ஈரான் ஆதரவு பெற்ற இரண்டு போராளிகள் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ட்ரோன் தாக்குதல்கள்
பக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் ஸோன்' பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தூதரக வளாகம், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது.

இந்தச் சம்பவம் குறித்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுவரை உடனடி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |