போர்விமானம் விழ.. வளைகுடா எங்கும் தாக்குதல்கள்! அமெரிக்கா அஞ்சுகிறதா.. ஈரான் கெஞ்சுகிறதா...
மத்திய கிழக்கு போர்க்களம் இன்று 3வது நாளுக்குள் நுழைய உடனுக்குடன் தாக்குதல் எதிர்த்தாக்குதல் என பதிலடிகள் வருகின்றன் இவை ராஜதந்திர சொல்லாட்சிகளுக்கும்; பொருந்துகின்றன.
இன்றும்(02.03.26) தெஹ்ரான்; பெய்ருத், பஹ்ரைன், டுபாய், அபுதாபி, டோஹா, குவைத் என எங்கும் பெரும் குண்டுவெடிப்பு ஒலிகளும் போர்விமானங்களின் பெருஇரைச்சல் வளையமடிப்புகளும் தொடர்ந்தன.
இதற்கும் அப்பால் குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்திற்கு அருகில் ஒரு போர்விமானம் வானில் தீப்பிடித்து வீழ்ந்தது (F-15E அல்லது F/A-18 ரகம்).
இவ்வாறான பரபரப்பு அதிர்வுகளுக்கு மத்தியில் ஈரானில் அதன் அதிஉயர் தலைவர் கமேனி கொல்லப்பட்ட பின்னர் ஈரானிய ஆட்சியாளர்கள் தன்னுடன் அவசரமாக பேசவிரும்புதாக அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்ட சொல்லாட்சிக்கு உடனடியாகவே பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ட்ரம்ப் பெருமானே! என்ற பாங்கில் ஈரானின் உயர் பாதுகாப்பு முகமான அலி லாரிஜானியின் பதிலடி வந்துள்ளது.
இந்த பதிலடியில், அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடக்காது என்றும் அமெரிக்க துருப்புக்களுக்கு உயிர்ப்பலிகள் ஏற்படும் என அஞ்சும் ட்ரம்ப் இந்த தந்திரத்தை செய்யவதாக ஈரான் குறிப்பிட்டாலும், அமெரிக்கா ஈரானில் கமேனியை கொன்றதை 27 சதவீதமான அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரிப்பதாக கருத்துக் கணிப்பு வந்தாலும் ஈரான் மீதான தாக்குதல்கள் ஆகக்குறைந்தது 4 வாரங்களுக்கு தொடரும் என ட்ரம்ப்பும் இறுக்கமாக நிற்கிறார்.
இதற்கிடையே இந்தப்போர் உலக சந்தையை அடிக்க ஆரம்பிப்பதற்கு அடையாளமாக மசகு எண்ணெய் விலை இன்று காலை 13 வீதத்துக்கு உயர்ந்தது. பாரசீக வளைகுடாவின் குறுகிய வாசலான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் இந்த நகர்வுகள், பொருளாதார நெருக்கடி சிஸ்ரத்தை தொடரும் அநுர மேற்பார்த்த சிறிலங்காவின் சிஸ்ரம் சேஞ் அரசாங்கத்துக்கும் இந்தப்போர் புதிய சவால்களை எழுப்பும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |