ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் வளைகுடா நாடுகள்
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டறிக்கையில், "பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகப் பலகட்ட தூதரக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மீறி ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி
எங்களது நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை விடயத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. ஈரானின் இந்த அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளின் இந்தத் திடீர் அறிவிப்பு பிராந்திய நிலைமையை மேலும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் ஈரானுக்கு எதிரான போர் சூழல் வளைகுடா நாடுகளை மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |