பலப்படுத்தப்படும் அமெரிக்கப் படைகள்! அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் தற்காலிக போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி, அங்குள்ள அமெரிக்கப் படைகள் தங்களை மீண்டும் பலப்படுத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இந்தப் போர்நிறுத்த இடைவேளையில் அமெரிக்க துருப்புக்கள் ஆயுதங்களை மீள்சேகரிப்பதிலும், போர்க்கருவிகளைச் சீரமைப்பதிலும், போர்த் தந்திரங்களை மாற்றி அமைப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தக்கட்ட இராணுவ நடவடிக்கை
சமீபத்தில் இப்பிராந்தியத்திற்கு மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில், அமெரிக்க வீரர்கள் மிகுந்த உத்வேகத்துடன் இருப்பதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை விரைவாகத் தகவமைத்துக் கொள்வதில் அமெரிக்க இராணுவம் உலகில் நிகரற்றது என்றும், அதனைத் தான் தற்போது களத்தில் நேரடியாகக் காண்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த இடைவெளியானது அடுத்தக்கட்ட இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கும், பலவீனங்களைச் சரிசெய்வதற்கும் மிக முக்கியமான காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |