அமெரிக்கர்களுக்கு பறந்த அவசர எச்சரிக்கை! உச்சக்கட்ட போர்ப் பதற்றம்
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றங்களைக் காரணம் காட்டி, அப்பகுதியில் வசிக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை தனது X தள பதிவில் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்லது அதன் வழியாகப் பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கக் குடிமக்களை வாஷிங்டன் வலியுறுத்தியதுடன், பயணிகள் அந்தந்த நாடுகளுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஆய்வு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம்
"மத்திய கிழக்கில் நிலவும் அதிக பதற்றம் காரணமாக, பாதுகாப்புச் சூழல் சிக்கலாகவே உள்ளதுடன், எதிர்பாராத விதமாக நிலைமை மோசமடையவும் வாய்ப்புள்ளது," என்று ஆலோசனை கூறியுள்ளது.

இதனால், அங்குள்ள நிலவரங்கள் குறித்த முக்கியச் செய்திகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் மத்திய கிழக்கு பகுதி அல்லது அதன் வழியாகப் பயணிப்பவர்கள் தங்கள் விமான நிறுவனங்களிடம் விமானப் பயண அட்டவணைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியது.
தங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தபோதிலும், இரு தரப்பினரும் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டு, ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |