ஈரானின் பிரம்மாண்ட ஏவுகணை உற்பத்தி ஆலை அழிப்பு: உறுதிப்படுத்திய அமெரிக்கா
ஈரானின் கராஜ் (Karaj) பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டு ஆட்சியின் மிகமுக்கியமான தரைவழி ஏவுகணை உற்பத்தி ஆலை தாக்கி அழிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
அமெரிக்கப் படைகள், அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச வணிகக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஒன்றிணைக்கும் பணியில் இந்த ஆலை ஈடுபட்டு வந்ததாகச் சென்ட்காம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்கள்
மத்திய கிழக்கில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவற்றின் உற்பத்தித் திறனை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Prior to Operation Epic Fury, the Iranian regime used the Karaj Surface-to-Surface Missile Plant to assemble ballistic missiles that threatened Americans, neighboring countries, and commercial shipping. The photo dated March 1, 2026, shows the plant prior to U.S. strikes. The… pic.twitter.com/QEs5toZQpX
— U.S. Central Command (@CENTCOM) March 19, 2026
இந்தத் தொழிற்சாலை அழிக்கப்பட்டதன் மூலம், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |