வான்பாதுகாப்பு ஏவுகணை - அதிநவீன ஆயுதங்கள்..! உக்ரைனைக்கு 1.80 பில்லியன் இராணுவ உதவி
போர்
உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து இன்று 301வது நாளை எட்டியுள்ளது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஸ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
1.80 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி
இந்நிலையில், உக்ரைனுக்கு அதிநவீன 'பேட்ரியாட்' வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
300 நாட்களுக்கு மேல் போர் நீடித்து வரும் நிலையில் ரஸ்யா - உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த உலகின் பல நாடுகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து வருகின்றன.
போர் தொடர்ந்து நீடித்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
