அமெரிக்காவில் விசா விதிகள் இறுக்கம்...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
விதிகளுக்குக் கட்டுப்படுங்கள் அல்லது விசாவை இழப்பீர்கள் என இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ளது.
அமெரிக்கச் சட்டங்களை மீறும் இந்திய மாணவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள்
இது தொடர்பில் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டாலோ அல்லது ஏதேனும் ஒரு வகையில் சட்டங்களை மீறினாலோ அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.
அத்தகைய மாணவர்கள் எதிர்காலத்தில் விசா பெறுவதற்குத் தகுதியற்றவர்களாகிவிடுவார்கள்.

விதிகளுக்குக் கட்டுப்படுங்கள், உங்கள் பயணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள்.
அமெரிக்க விசா என்பது ஒரு சிறப்புரிமை மற்றும் அது ஒரு உரிமை அல்ல” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர்15 ஆம் திகதி முதல் அனைத்து எச்-1 பி விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் ஆன்லைன் குறித்த ஆய்வு நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
மேலும்அமெரிக்காவில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு தூதரகம் இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிடுவது இது முதல் முறையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 16 மணி நேரம் முன்