ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மதியக்கிழக்கில் அதிகரித்த பதற்றம்
ஈரானிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்து, யு.எஸ்எ.ஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பல் அப்பகுதியில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவம் கப்பலைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதனால் கப்பல் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஈரான் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
இருப்பினும், தங்களது நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், திட்டமிட்டபடி அந்தக் கப்பல் ஈரானிய இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஈரானிய இராணுவ இலக்கு
ஈரானிய இராணுவ இலக்குகளுக்கு எதிராக USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலிலிருந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்படை (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஏவுகணைத் தளங்கள், அணு திட்டம் தொடர்பான இடங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கி வருகின்றன.
இந்த நடவடிக்கையில் சான் டியாகோவை தளமாகக் கொண்ட நிமிட்ஸ் வகுப்பு விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தபடி,
“கப்பலிலிருந்து F/A-18 சூப்பர் ஹார்னெட் போன்ற போர் விமானங்கள் தொடர்ந்து ஏவப்பட்டு ஈரானிய இலக்குகளைத் தாக்கி வருகின்றன.
CENTCOM, “ஆபிரகாம் லிங்கன் கேரியர் ஸ்ட்ரைக் குழு ஈரானிய வான்வெளியை ஆதிக்கம் செலுத்தி வருகிறது” என்று வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஈரானிய இராணுவம் (IRGC) தங்கள் கடற்கரைப் பகுதியிலிருந்து Qader க்ரூஸ் ஏவுகணைகளை யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் நோக்கி ஏவியதாகக் கூறியுள்ளது.
ஈரானிய தீவை கைப்பற்ற அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இரகசிய ஆதரவு! எச்சரிக்கையாக மாறிய உளவுத் தகவல்
அமெரிக்கக் கப்பல் குழு
இந்தத் தாக்குதலால் அமெரிக்கக் கப்பல் குழு தனது நிலையை மாற்றியதாகவும் ஈரான் வாதித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா இந்தக் கூற்றுகளை முழுமையாக மறுத்துள்ளது.
CENTCOM தெரிவித்துள்ளது: “ஈரானின் கூற்று பொய்யானது. ஏவுகணைகள் கூட அருகில் வரவில்லை. ஆபிரகாம் லிங்கன் தொடர்ந்து செயல்பட்டு, தாக்குதல்களை நடத்தி வருகிறது.” என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தரப்பில் பல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில், அமெரிக்கா தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |