மாவீரர் அஞ்சலியுடன் வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு நிறைவேற்றம்
மாவீரர் அஞ்சலி நிகழ்வுடன் வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஐந்தாவது சாதாரண கூட்டமானது தவிசாளர் தி.கிருஸ்ணவேணி தலைமையில் நடைபெற்று இருந்தது.
இதன் போது மாவீரர் நினைவாக தவிசாளர் மற்றும் உபதவிசாளர் வி.சஞ்சுதன் உள்ளிட்டோர் தீபம் ஏற்றியதுடன், மாவீரர் நினைவு வணக்கத்துடன் சபை அமர்வு இடம்பெற்றது.
சபையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்ட போது சபை உறுப்பினர்கள் 23 பேரில் 22 பேர் பிரசன்னமாகி இருந்த நிலையில் ஏகமனதாக பாதீடு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வரவு செலவு திட்டத்தின் நோக்கம்
இது தொடர்பில் சபையின் தவிசாளர் கருத்து தெரிவித்த போது,
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது.எங்களுடைய வவுனியா வடக்கு பிரதேசத்தை நாங்கள் ஒரு முன்மாதிரியான பிரதேசமாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தோடு நாங்கள் இந்த வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளோம்.

அந்த வகையில் எங்களுடைய இந்த பிரதேசத்தில் 14 வட்டாரங்கள் காணப்படுகின்றது. 25 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பிரதேச சபையின் ஊடாக சபைக்கான சொந்த வருமானமாக 4 கோடியே 57 லட்சத்து 25 ஆயிரத்தி 500 ரூபாய் வருகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்