திடீரென டெல்லி பறந்த திருமாவளவன் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபாலை அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த சூழலில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளே இந்தப் பயணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள மோதல்
அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பிற்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த சுமார் 34 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

ஆதவ் அர்ஜுனா மற்றும் லீமாரோஸ் மார்ட்டின் மூலமாக இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவை புறக்கணித்த திருமாவளவன்
நேற்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு விசிக-வுக்கு நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டும், திருமாவளவன் அதில் கலந்துகொள்ளவில்லை.

திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது மற்றும் தவெக கூட்டணியில் நிலவும் அதிகாரப் பகிர்வு சிக்கல்கள் விசிக-வை ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியுள்ளன. குறிப்பாகத் துணை முதலமைச்சர் பதவி மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி குறித்து நிலவும் இழுபறியே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
தமிழக அரசியலில் நிலவும் இந்த அதிரடி மாற்றங்கள், அடுத்த சில வாரங்களில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |