தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!
தமிழகத்தின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (11-05-2026) காலை 9.30 மணிக்குச் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் கூடியுள்ளது.
இக்கூட்டத்தில், அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர்.
தற்காலிகப் பேரவைத் தலைவர் கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
தற்காலிகப் பேரவை
இதற்கான அறிவிப்பைச் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனுவாசன் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்திருந்த நிலையில், உறுப்பினர்கள் அனைவரும் வெற்றிச் சான்றிதழுடன் சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொண்டிருந்தார்.
தொடர்ச்சியா தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச. ஜோசப் விஜய் நேற்று (10-05-2026) மாலை பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்குத் தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதலமைச்சர் விஜய்யுடன் அவரது கட்சியைச் சேர்ந்த ஒன்பது முக்கிய உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் நிலவிய இழுபறிகளுக்குப் பின் ஒரு வழியாகப் புதிய அமைச்சரவை பதவியேற்றது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |