வாகன இலக்கத் தகடு விநியோகத்தில் புதிய வாகனங்களுக்கு முன்னுரிமை!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகள் குறித்து மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கருத்து வௌயிட்டுள்ளார்.
அதன்படி, இலக்கத் தகடுகளை அச்சிடும் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் புதிய வாகனப் பதிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு கால இடைநிறுத்தத்திற்குப் பின்னர், வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் கடந்த ஜூன் 8, 2026 அன்று வெரஹெரவிலுள்ள திணைக்கள அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு மில்லியன் இலக்கத் தகடுகள்
இந்த தற்காலிக இடைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மில்லியன் இலக்கத் தகடுகள் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இந்த நிலுவையை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் இலக்கத் தகடுகளைத் தடையின்றி விநியோகிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

வெரஹெர அலுவலகம் தற்போது இரு கட்டங்களாகத் தனது பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் பகல் நேரத்தில் அச்சிடப்படும் எனவும் நிலுவையில் உள்ள இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இரவு நேரத்தில் மேலதிக பணியாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 5 மணி நேரம் முன்