யாழ். ஊரெழு பகுதியில் போதைப்பொருளுடன் நபர் கைது
புதிய இணைப்பு
யாழ். ஊரெழு பகுதியில் ஹெரோயினுடன் 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையில் சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது
இவ் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய்க் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் - பிரதீபன்
முதலாம் இணைப்பு
சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு (03.11.2025) அடையாளம் தெரியாத குழுவொன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறைக்குழு அங்கு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது தீ வைத்துள்ளனர்.
இதனால் முச்சக்கர வண்டியானது முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
பாரிய சேதம்
மேலும், வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில் விழிப்படைந்த வீட்டார் தீயை அணைத்ததால் மேலும் சேதங்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுன்னாகம் காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








