சென்னைக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை! தொடரும் டிட்வா புயலின் தாக்கம்
இந்தியாவின் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் டிட்வா புயலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னையின் பல இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
கனமழை
மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் சென்னைக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை பாடசாலை கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையை தொடர்ந்து திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |