இரு நாட்களுக்கு நீர் வெட்டு: மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
Agriculture Water And Action For Rural Development
Kandy
Sri Lankan Peoples
Water Cut
By Dhilak
கண்டியின் (Kandy) பல பிரதேசங்களில் எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி முதல் இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) வெளியிட்டுள்ளது.
அதன்படி, 28 ஆம் திகதி சனிக்கிழமை மதியம் 1.00 மணி முதல் குடிநீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்படுகிறது.
கோரிக்கை
இதேவேளை, மகாவலி அதிகார சபையினால் பொல்கொல்ல திசைமாற்று அணைக்கட்டுக்கு நீர் இழுத்துச் செல்லப்படுவதால் எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு விநியோகம் வழமைக்கு திரும்பும்.

எனவே, அப்பகுதிகளில் உள்ள நுகர்வோர் இந்த இரண்டு நாட்களிலும் தங்கள் தேவையை நிர்வகிப்பதற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 19 நிமிடங்கள் முன்