நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அடுத்த நீர் கட்டண திருத்தம் ஜூன் 30 ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் (கலாநிதி) சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீர் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை மீளாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது காலாண்டு
இந்தநிலையில் ஜூன் 30 ஆம் திகதி நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் வரவிருக்கும் நீர் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11-05-2026) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் முதலாவது திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அண்மையில் அனுமதி வழங்கியது.
அதன்படி, மின்சாரக் கட்டணத்தை எட்டு வீதம் முதல் 14.4 வீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டண உயர்வு
அதனைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதைக் காரணம் காட்டி இரண்டாவது காலாண்டிற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு ஏப்ரல் 27 அன்று ஆணைக்குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும், மின் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் எழுத்துப்பூர்வமாகச் சம்மதித்துள்ளது.

இதன் காரணமாக இந்த மின்சாரக் கட்டண உயர்வு நாட்டின் 95 வீதம் மின் நுகர்வோருக்குப் பொருந்தாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதத்திற்கு 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்குக் கட்டண உயர்வு இருக்காது.
இருப்பினும் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு நுகர்வு அளவைப் பொறுத்து கட்டணம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |