"மறக்குமா மே 18" புலம்பெயர் மண்ணில் இடம்பெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (நேரலை)
2009 முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் நிகழ்வானது தமிழர் தயாகப் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தேசத்து உறவுகளும் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களை நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துகின்றார்கள்.(நேரலை)
இணைப்பு இரண்டு
இறுதி யுத்தத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கின்ற வலியையும் வரலாற்றையும் தமிழினம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்ற நாளே இன்று(மே 18)
இத்தனை ஆண்டுகள் உருண்டோடிப்போய் இருக்கின்ற தருணத்திலே இளையவர்களாக சிறுவர்களாக இந்த யுத்தத்தினுடைய சாட்சிகளாக எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
யுத்தத்தினுடைய சாட்சி என்பது அந்த இனத்தினுடைய வீரத்தை சொல்லும், அதேபோல் அவ்வினம் பட்டிருக்க கூடிய வலிகளை சொல்லும், அந்த இனம் எழுவதற்கான தங்களுடைய எண்ணங்களை சொல்லும் ஏனென்றால் அத்தனையும் ஒருசேரப்பார்த்து விட்டு வந்திருக்ககூடிய மனமாக அந்த இனத்தினுடைய இளையவர்கள் இருக்கின்றார்கள்.
யுத்தம் தின்ற மண்ணிலிருந்து வந்திருக்க கூடிய எம்மவர்கள் அந்த முள்வேலி நாட்களை நினைவு கூருகின்றார்கள்
