தமிழ் தேசிய விடுதலைக்காக போராட வேண்டும் : சிறிநாத் எம்.பி வலியுறுத்தல்

Tamils Batticaloa Mullivaikal Remembrance Day Ilaiyathambi Srinath
By Sathangani May 12, 2025 10:02 AM GMT
Report

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த நாடு முன்னேற்றகரமான பாதைக்கு செல்ல முடியாது என சிங்கள அரசும் சிங்கள தேசிய இனமும் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் (Ilaiyathambi Srinath) தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2009 இனவழிப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுடன் தமிழ் தேசிய விடுதலைக்காக இளம் சந்ததியினர் தொடர்சியான போராட்டத்தினையும் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு (Batticaloa) சத்துருக் கொண்டான் நினைவு தூபியில் வடகிழக்கு பொங்கு தமிழ் பேரவையின் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (12) கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

 பட்டலந்தை அறிக்கை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் எங்கெல்லாம் மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டார்களே அங்கெல்லாம் இந்த கஞ்சி வழங்கும் ஏற்பாடு இடம்பெறும் இந்த பிரதேசத்தில் பாரிய படுகொலை செய்யப்பட்ட வரலாறு இருக்கின்றது.

தமிழ் தேசிய விடுதலைக்காக போராட வேண்டும் : சிறிநாத் எம்.பி வலியுறுத்தல் | We Should Fight For Tamil National Liberation

இனவழிப்பு நோக்கத்துடன் தமிழர்களுடைய விடுதலையை நசிப்பதற்காக திட்டமிட்டு பல பிரதேசங்களில் நடாத்தப்பட்டிருந்தது. அந்தவகையில் சத்துருக்கொண்டான் படுகொலை கூட 186 அப்பாவி தமிழ் மக்கள் எந்த விதமான விசாரணைகளும் இன்றி மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தனர்.

அந்த கொலைகளுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நீதியின்றி முடக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இந்த அரசு பட்டலந்தை வதை முகாம் தொடர்பான விடயத்தை கையில் எடுத்து அது தொடர்பான விசாரணைகளை மீள கொண்டு வருகின்றது.

அதேவேளை தமிழ் பிரதேசம் எங்கும் கடந்த போராட்ட காலத்திலே பல படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் சாட்சிகள் ஆவணங்களாக இருக்கின்ற பொழுது அது தொடர்பாக எந்த விதமான முனைப்புக்கள் காட்டப்படாமல் தற்போது கூட தமிழ் தேசிய இனத்தை உதாசீனப்படுத்துகின்றது.

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் 

இவ்வாறு தமிழ் மக்களது கோரிக்கையை செவிமடுக்காத போக்கு இந்த நாட்டிலே தமிழ் மக்கள் வாழ்வதற்கான உறுதிப்படுத்தலை வழங்காது சிங்கள தேசிய பௌத்த அரசியல் நடந்து கொள்கின்றது.

தமிழ் தேசிய விடுதலைக்காக போராட வேண்டும் : சிறிநாத் எம்.பி வலியுறுத்தல் | We Should Fight For Tamil National Liberation

அந்த வகையில் 2009ம் ஆண்டு யுத்த இறுதிக்கட்டத்திலே பொது மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். இது எங்களுடைய இனத்தை இந்த நாட்டில் இல்லாமல் செய்வதற்காக தமிழர்களுடைய இன பரம்பலை குறைத்து நிர்கதியற்ற கையேந்தும் நிலையில் வாழ வேண்டும். போராடுகின்ற நிலமையிலே தமிழ் மக்கள் தங்களுக்கான உரிமைகளை என்றும் கேட்க கூடாது என திட்டமிட்ட வகையில் நடந்தேறியுள்ளது.

அதற்கான நியாம் கூட இன்றுவரையும் எந்த விதமான வகையிலும் முன்னெடுக்கப்படவில்லை.   யுத்தம் மௌனிக்கப்பட்டு 16 வருடங்களாக அதற்கான முனைப்புக்களை தமிழ் தேசிய சக்திகள் தமது இனத்தின்பால் பற்றுக்கொண்ட அமைப்புக்கள் முன்னெடுக்கின்றபோதும் அதற்கான எந்தவிதமான அனுமதியும் அங்கீகாரமும் இந்த நாட்டில் வழங்கப்படவில்லை.

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது

படுகொலை செய்யப்பட்ட மக்கள்

இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டிலே நிம்மதியாக வாழமுடியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் கூட மிக தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பாக ஒடுக்கப்படுகின்ற நிலமையே காரணமாக இருந்திருக்கின்றது.

தமிழ் தேசிய விடுதலைக்காக போராட வேண்டும் : சிறிநாத் எம்.பி வலியுறுத்தல் | We Should Fight For Tamil National Liberation

எனவே அவற்றை சிங்கள தேசிய இனம் புரிந்து கொள்ளாத வகையிலே இந்த நாட்டிலே ஒரு சுபீட்சமான நாடாக முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் இல்லை.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த இனவழிப்புக்கு தமிழ் மக்கள் இன ரீதியாக கொத்து கொத்தாக அழிக்கப்பட்டனர். அதற்கான நீதி கிடைக்கவில்லை.  இவ்வாறான பல செயற்பாடுகள் அரங்கேறியுள்ளது என எதிர்கால அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவேண்டும்.

இந்த இறுதி யுத்தத்ததில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு இதய பூர்வமாக அஞ்சலி செலுத்துவதுடன் அவர்கள் எந்த இனத்தின் விடுதலைக்காக உயிர்நீத்தார்கள் என்ற செய்தி சர்வதேசத்திற்கு மிக ஆணித்தரமாக சொல்ல வேண்டிய தருணம்” இது என தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !

பாகிஸ்தானுடனான யுத்தத்தின் உண்மையிலேயே வெற்றி பெற்றது யார் !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி