நாங்கள் தலைவணங்க மாட்டோம்! ஹிஸ்புல்லா தலைவர் திட்டவட்டம்
லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களை கைவிடப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் நயீம் காசிம் தங்களது போராட்டம் தற்காப்பிற்கானது என்றும் அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் தியாகங்கள் மகத்தானவை. அவை விடுதலைக்கான விலையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்காப்புப் போராட்டம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“லெபனான் மக்களின் கௌரவமான எதிர்ப்பின் மூலம் அவர்கள் இந்த உயிர்த்தியாகங்களை தாங்கிக்கொண்டுள்ளனர்.
மேலும், விடுதலை மற்றும் பெருமை அல்லது ஆக்கிரமிப்பு மற்றும் அவமானம் என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.
லெபனானுக்காகவும் அதன் மக்களுக்காகவும் நாங்கள் எங்களது தற்காப்புப் போராட்டத்தைத் தொடர்கிறோம்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு
மார்ச் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு நாம் திரும்ப மாட்டோம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுத்து அதை எதிர்கொள்வோம்.
அத்தோடு, எதிரியின் அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும் தாங்கள் பின்வாங்க மாட்டோம்.
நாங்கள் தலைகுனிய மாட்டோம், தோற்கடிக்கப்பட மாட்டோம். தவர்களின் ஆற்றல் வற்றாதது. என்றுமே இஸ்ரேல் லெபனானில் நிலைத்திருக்க முடியாது
குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்துடனான தெற்கு எல்லையின் கடைசி அங்குலம் வரை எங்கள் மக்கள் தங்கள் நிலங்களுக்குத் திரும்புவார்கள்,” என்று உறுதியளித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 5 மணி நேரம் முன்