தீடீர் காலநிலை மாற்றம் - கிழக்கைத் தாக்கும் பலத்த காற்று; முற்றாக சேதமடைந்த கடலரிப்புத் தடை!
Ampara
Sri Lanka
Eastern Province
Weather
By Kalaimathy
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசுவதால் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. அத்துடன் கடும் குளிர் காற்றும் வீசுகின்றது.
இக்காலநிலை மாற்றம் காரணமாக பிரதேசத்து மக்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடலரிப்புத் தடை முற்றாக சேதம்
இதேவேளை சாய்ந்தமருதில் உள்ள பௌசி விளையாட்டு மைதானத்தின் கடலரிப்புத் தடை எல்லை அடித்தளம் முற்றாக கடலரிப்பில் சேதமுற்றுள்ளது.
கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. மழையுடன் கூடிய குளிர் காற்று வீசுவதனால் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்