மாறி வரும் காலநிலை - வடக்கு மக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை
வெப்பநிலை குறைந்து குளிரான நிலை காணப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயல்படுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் ஏன் என்றால் தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக எமது நாட்டிலும் குளிர் அதிகளவில் காணப்படுகின்றது.
நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வெப்பநிலை 18 செல்சியஸ் ஆக குறைவடைந்து சென்றுள்ளதனால் பல மாடுகள் உயிரிழந்துள்ளன.
இந்த காலத்தில் மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும். குறிப்பாக இந்த காலநிலைமாற்றத்துடன் வளி மண்டலம் மாசடைந்த நிலைமை காணப்படுகின்றது.
நேற்று முன்தினம் சற்று அபாய நிலையினை அடைந்து நேற்று குறைந்திருந்து.இன்று மீண்டும் அதிகரித்துள்ள நிலை காணப்படுகின்றது.
எனினும் இந்த டிசம்பர் மாதம் என்பதால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.குறிப்பாக இந்த காலத்தில் வெளியில் செல்வோர் கூடுதல் கவனம் எடுத்தல் நல்லது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
