வார இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பிலான தகவல் வெளியானது!
வார இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க (Janaka Ratnayake) தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை(19) A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணிவரையான காலப்பகுதியினுள் 02 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும், மாலை 06 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும்,
அத்துடன் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு நாளை மறுதினம்(20) காலை 09 மணி தொடக்கம் மாலை 05 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும், மாலை 05 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதேபோன்று நாளை(19) P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 04 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும், மாலை 04 மணி தொடக்கம் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும்,
அத்துடன் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு நாளை மறுதினம்(20) மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
