இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் : மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
அணித்தலைவர் ஷாய் ஹோப் அணியை வழிநடத்த உள்ளார். இந்த அணியில் அனுபவமிக்க வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் இதில் அடங்குவர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்
ஒருநாள் அணியில் ஷாய் ஹோப் (அணித்தலைவர்), அகீம் அகஸ்டே, ஜோன் கேம்ப்பெல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அமீர் ஜாங்கூ, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஸ்பிரிங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஜமைக்காவின் சபினா பூங்காவில் ஜூன் 3, 6 மற்றும் 8 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில், ஜூன் 11 முதல் 14 வரை மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஜூன் 25 முதல் ஜூலை 7 வரை ஆன்டிகுவாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் இடம்பெறும்
ஒரு மாதம் நீடிக்கும் இந்த சுற்றுப்பயணத்தின் போது, மூன்று வடிவங்களிலும் இலங்கையை மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும்போது, அதற்கான உத்வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |