22 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கும்!

Sri Lanka Sri Lankan political crisis
By Dharu Nov 17, 2025 12:27 PM GMT
Report

பொது எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் கூட்டணியின் நுகேகொடை பேரணி 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன் பின்னணியில் எதிர்க்கட்சி அரசியல் இன்னும் குழப்பமானதாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளகப் பிளவுகள் தீவிரமடைந்து வருவதற்கான அறிகுறிகள் ஏற்கனவே உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த பேரணி காரணமாக நாமல் ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க கூட்டணிக்குள் உள்ள பிளவுகளும் தீவிரமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்கிருந்து வந்தார் சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்!

எங்கிருந்து வந்தார் சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்!

தர்க்கரீதியான வாதங்கள்

தாராளவாதிகளும், தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்கும் யூடியூப் சேனல்களும், இந்தப் பேரணிக்குப் பிறகு 22 ஆம் திகதி முதல் எதிர்க்கட்சிக்கு என்ன நடக்கும் என்று கிண்டலாக ஊகிக்கின்றன.

22 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கும்! | What Will Happen In Sri Lankan Politics On 22Nd

இதன் பின்னணியில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, அடுத்த ஆண்டு பொது எதிர்க்கட்சி என்று அழைக்கப்படும் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.

21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் இணைவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் கட்சி தலைவர் குறித்த பேரணியில் கலந்துக்கொல்லப்போவதில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில், நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு எதிராக நேரடியாக வாக்களித்தனர்.

மேலும், நாமல் மற்றும் ரணில் தலைமையிலான பேரணியில் எதிர்க்கட்சியின் ஒரு பகுதியினர் பங்கேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிக்கத் தயாரான நிலையில் மெகசின் சிறைச்சாலை : சாமர சம்பத் எச்சரிக்கை

வெடிக்கத் தயாரான நிலையில் மெகசின் சிறைச்சாலை : சாமர சம்பத் எச்சரிக்கை

கூட்டு எதிர்க்கட்சி 

இவ்வாறான விடயங்களால் உள்ளக பிளவுகள் வெளிப்பட்டுள்ளன.

22 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கும்! | What Will Happen In Sri Lankan Politics On 22Nd

இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்துள்ள நுகேகொடை பொதுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பல சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தொடர்ந்து கேட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் நிர்வாகக் குழு உட்பட பல கூட்டங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொள்ளாவிட்டால், கட்சியின் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதிநிதிகள் கடுமையாகக் கோரிக்கை விடுத்திருந்தாலும், சஜித் பிரேமதாச அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகிறது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவுடன் இணைந்து பயணிக்கப் போவதில்லை என்று கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

சற்றுமுன்னர் திருகோணமலையில் கடும் பதற்றம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

சற்றுமுன்னர் திருகோணமலையில் கடும் பதற்றம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

மகிந்த ராஜபகசவின் குடும்பம்

இதன்படி மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பின்னணியில், அவரிடம் உதவி கோருவது நல்லது என தெரிந்தவர்களுக்கு தற்போது அவருடன் இணைந்து நிற்பது தவறாகும் என கூறுவது எப்படி சரியாக அமையும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

22 ஆம் திகதிக்கு பின்னர் அரசியலில் என்ன நடக்கும்! | What Will Happen In Sri Lankan Politics On 22Nd

இந்நிலையில் யார் திருடன், யார் திருடன் என்று கூச்சலிட்ட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் இப்போது ஒரே மேடையில் நின்று, போராட ஆரம்பித்துள்ளன.

நாமல் ராஜபக்சவின் முகாமும், ரணில் விக்ரமசிங்கவின் முகாமும் இந்த நாட்டு மக்களை போராட்டத்திலும் தேர்தலிலும் தோற்கடித்துவிட்டன.

ஆகையால் (21) இது ஒரு பொதுப் பேரணி அல்லது வேறு எதுவும் அல்ல என்றும், இது மக்களுக்காகச் செய்யப்பட்டிருந்தால், எதிர்க்கட்சி கடந்த காலத்தில் நிறைய விடயங்களைச் செய்திருக்க முடியும் என விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் அது என்ன செய்கிறது? இப்போது நாமல் ராஜபக்ச மீண்டும் ஒரு முகாமை உருவாக்க விரும்புகிறார் என விமர்சனங்களும் வலுத்துள்ளது.

அந்த தோற்கடிக்கப்பட்ட அரசியல் முகாமை நாமல் தற்போது உருவாக்க விரும்புகிறார்.

இந்த நாட்டு மக்கள் கடந்த காலங்கயில் நிராகரித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி, மறுபுறம், தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும்  அனைவரும் ஒரே மேடையில், நுகேகோடாவில் நிற்கபோகின்றனர்.

இது அதிகாரத்திற்காக விளையாடப்படும் விளையாட்டு என சில தரப்புக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025